ஒரே ஒரு பயணியுடன் சென்ற சிறப்பு ரயில்!!!
சென்னை :சென்னையிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஒரே ஒரு பயணிமட்டும் முன் பதிவு செய்து பயணித்தது ரயில்வே துறையில் பெரும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.
விழாக் காலங்களிலும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களிலும் குறிப்பிட்டஊர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது ரயில்வே துறையின் வாடிக்கை. சிறப்புரயில்கள் இயக்குவது குறித்து முன்கூட்டியே பத்திரிக்கைகள், டிவி செய்திகள் மூலமாகதெரிவிப்பதும் வழக்கம்.
ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக விடப்பட்ட சிறப்பு ரயில் ஒன்றில், ஒரே ஒருபயணி மட்டும் முன் பதிவு செய்து பயணித்த வினோதம் நடந்துள்ளது.சென்னையிலிருந்து வாரணாசிக்கு 2 நாட்களுக்கு முன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மாலையில் கிளம்பிய சிறப்பு ரயில் குறித்தஅறிவிப்பை அன்று காலையில்தான் வெளியிட்டனர். இதனால் யாருக்கும் சிறப்புரயில் குறித்த தகவலே தெரியாமல் போனது. ஆனால் ஒரே ஒரு பயணி மட்டும் இதை(எப்படியோ) அறிந்து முன் பதிவு செய்தார்.
மாலை ரயில் கிளம்பியபோது அந்த பயணி மட்டும் ரயிலில் ஏறிப் பயணம் செய்தார்.ரயில் கிளம்பிச் சென்றவுடன்தான் அந்த ரயிலில் ஒரே ஒரு நபர் மட்டும் பயணம்செய்வது தெரிய வந்தது. இதை அறிந்த அந்த பயணியும் வியப்படைந்தார்.
ஏறும்போதே நினைத்தேன், பிளாட்பாரத்தில் யாரையும் காணவில்லையே என்று அந்தபயணி ரயில்வே ஊழியர்களிடம் ஆச்சரியப்பட்டுக் கூறியுள்ளார். ரயிலில் இருந்த 880இருக்கைகளும் காலியாகக் கிடக்க அந்த ஒத்த பயணி ரயில் முழுக்க சுற்றிச் சுற்றிச்சென்று தனது தனிப் பயணத்தை அனுபவித்துள்ளார்.
ஆந்திராவில் சில நிலையங்களில் மட்டும் சில பயணிகள் ஏறியுள்ளனர். ஆனால்அவர்களும் வாரணாசி போவதற்காக ஏறவில்லை. ஆந்திராவுக்குள்ளேயே அவர்கள்இறங்கி விட்டனராம்.
வாரணாசி வரை பயணித்த ஒரே பயணி சென்னையில் ஏறிய அந்த தனிப்பயணிதான்.
இந்த சோலோ ஓட்டத்தால் ரயில்வே துறைக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.இருந்தாலும் ரயிலை ரத்து செய்ய முடியாது என்பதால் ஒரு பயணியுடனேயே பலமாநிலங்களைக் கடந்து வாரணாசியை அடைந்துள்ளது அந்த சிறப்பு ரயில்.
சிறப்பு ரயில் முன்பதிவு குறித்து முன் கூட்டியே, முன் யோசனையுடன் ரயில்வே துறைசெயல்பட்டிருந்தால் இந்த வெட்டி செலவு மிஞ்சியிருக்கும்!.












Click it and Unblock the Notifications