பெரியாறு அணை: அதிமுக கண்டன கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும்இன்று அதிமுக சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் போக்குடனும், கேரளஅரசுக்கு சாதகமாகவும் திமுக அரசு நடந்து வருவதாக கூறி இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 10ம் தேதிகண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
அதன்படி இன்று மாலை அதிமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர்ஓ.பன்னீர் செல்வம், காஞ்சிபுரத்தில் செங்கோட்டையன், தென் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications