For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடகள வீராங்கனைக்கு ரூ. 15 லட்சம் பரிசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் பரிசு அளிக்கப்படுவதாகமுதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோஹாவில் நடந்து வரும்ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில், 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை சாந்தி வெள்ளிப பதக்கம்வென்றுள்ளார்.

மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான சாந்தியின் இந்த சாதனைபாராட்டுக்குரியது. அவரது சாதனையைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் ரூ. 15லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

கூட்ட நெரிசல் பலி: 7 பெண்களுக்கு அரசு வேலை

இதற்கிடையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி பலியான குடும்பங்களைச் சேர்ந்த 7 பெண்களுக்கு சத்துணவுத் துறையில்வேலை வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் மழை வெள்ள நிவாரணம் பெற சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில்திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

அவர்களில் கணவர்களை இழந்த 7 பெண்களுக்கு அரசு வேலை வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அதா, ஷர்மிளா பானு, பரமேஸ்வரி, சாந்தி,மீனா, சித்திரைக்கனி ஆகியோருக்கு அவர்களது தகுதிக்கேற்ப சத்துணவுத் துறையில் வேலை வழங்கப்படும்.

அதேபோல ஆர்.அமுதா என்ற பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X