பாஜக விமர்சனத்துக்கு பிரதமர் கண்டனம்
டெல்லி:இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிக சலுகைகள்,உரிமைகள் வழங்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பிரதமர்மன்மோகன் சிங் பேசியதை சர்ச்சையாக்கும் பாஜகவின் போக்கு கண்டனத்துக்குரியதுஎன்று பிரதமரின் பத்திரிகைக் தொடர்பாளர் சஞ்சய் பாரு கூறியுள்ளார்.
டெல்லியில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பிரதமர்மன்மோகன் சிங் பேசுகையில், சிறுபான்மையினருக்கு வளர்ச்சித் திட்டங்களில் அதிகமுன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில்புதிய திட்டங்களை தீட்ட வேண்டும்.
திட்டங்களுக்கான நிதி ஒதுக்கும்போது சிறுபான்மையினரின் உரிமைகளுக்குமுக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களுக்குத்தான் அதிக அதிகாரம் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பாஜக கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்களைதிருப்திப்படுத்தும் வகையிலேயே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளதாக அக்கட்சிகூறியுள்ளது. இதுகுறித்து பிரதமரின் பத்திரிகைத் தொடர்பாளர் சஞ்சய் பாருகூறுகையில், இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து சிறுபான்மையினர் குறித்தும்தான்பிரதமர் பேசியுள்ளார்.
வளர்ச்சித் திட்டங்களில் இஸ்லாமியர்களையும் அதிக அளவில் உட்படுத்த வேண்டும்என்பதே பிரதமரின் விருப்பம். இந்த விஷயத்தை பாஜக சர்ச்சையாக்குவதுகண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார பாரு.












Click it and Unblock the Notifications