ஜன. 27ல் பவார்-திண்டிவனம் கட்சி இணைப்பு
டெல்லி:சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் திண்டிவனம் ராமமூர்த்தியின்தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சி ஜனவரி 27ம் தேதி தஞ்சையில் நடைபெறும்நிகழ்ச்சியில் இணைகிறது.
அதிமுகவை நம்பி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்ததிண்டிவனம் ராமமூர்த்தி சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியை விட்டுநீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனிக்கட்சி ஆரம்பித்தார்.
தனது கட்சிக்கு ஆரம்பத்தில் தமிழக இந்திரா காங்கிரஸ் என்று பெயர் வைத்தார்.பின்னர் இதை தமிழக ஜனநாயக காங்கிரஸ் என மாற்றினார். அதன் பின்னர் படுஅமைதியாக இருந்து வந்த திண்டிவனம் ராமமூர்த்தி தற்போது தனது கட்சியைசரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க முடிவு செய்தார்.
இரு கட்சிகளின் இணைப்பு விழா ஜனவரி 27ம் தேதி தஞ்சாவூரில் சரத் பவார்தலைமையில் நடைபெறுகிறது. இணைப்பு விழா தொடர்பாக டெல்லியில்சரத்பவாரை சந்தித்து திண்டிவனம் ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நிடத்தினார்.
இதேபோல புதுச்சேரி மாநில ஜனநாயக காங்கிரஸும் பவார் கட்சியில் இணைகிறது.பவார் கட்சியுடன் இணைந்த பிறகு தமிழகத்தில் காங்கிரஸுடன் இணைந்துபணியாற்றுவோம் என ராமமூர்த்தி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications