எஸ்.எஸ்.சந்திரன் பொதுக் கூட்டத்தில் ரகளை
பொள்ளாச்சி:கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக எம்.பி. எஸ்.எஸ்.சந்திரன் கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டது. ஒரு தொண்டரின் மண்டைஉடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் போக்கைக் கண்டித்துஅதிமுக சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று மாலை கண்டன பொதுக் கூட்டம்நடந்தது. மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
இதேபோல பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். அவர்பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தினர் மீது கல் வந்து விழுந்தது. இதில் ஆறுமுகம்என்பவரின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கற்களை வீசி ரகளை செய்தவர்களுக்கும், அதிமுகவினருக்கும்இடையே பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. கூட்டத்தையொட்டி கட்டப்பட்டிருந்த டியூப்லைட்டுகளை சிலர் அடித்து உடைத்தனர்.உடனடியாக விரைந்து வந்த போலீஸார் இரு தரப்பினரையும் விலக்கிசமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால் ரகளை செய்தவர்கள் அடங்காததால், லேசான தடியடி நடத்தி அவர்களைக்கலைத்தனர். அதன் பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது.












Click it and Unblock the Notifications