தமிழக கைதிகளுக்கு கோழிக் கறி சாப்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக சிறைச் சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கோழிக் கறியுடன் உணவு வழங்கும்முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் மொத்தம் 9 மத்திய சிறைகள், 2 பெண்கள் சிறைகள் உள்பட மொத்தம்133 சிறைச் சாலைகள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் கைதிகள்அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளுக்கு ஆரம்ப காலம் முதலே ஒரு கப் சாதமும், ஒரு கப் சாம்பாரும் மட்டுமேவழங்கப்பட்டு வருகிறது. இதை மாற்றி வாரம் ஒரு முறை கோழிக்கறியுடன் சாப்பாடுவழங்க முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவிட்டார்.

அதன்படி தமிழக கைதிகளுக்கு வாரம் ஒருமுறை 115 கிராம் கோழிக் கறி, ஒரு கப்குழம்பு, 650 கிராம் சாதம், மோர் ஆகியவற்றுடன் கைதிகளுக்கு சாப்பாடு தரப்படும்.சைவ உணவுக்காரர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் சாதம், சாம்பார், மோருடன்கூடுதலாக அல்வா, ரவா கேசரி, உருளைக் கிழங்கு மசாலாக் கூட்டு, ஒருவாழைப்பழம் வழங்கப்படும்.

கோழிக்கறி உணவு வழங்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. சிறைத் துறைகூடுதல் டிஜிபி பாலச்சந்திரன் சென்னை மத்திய சிறையில் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்து உணவு பரிமாறி அதை கைதிகளுக்கு வழங்கினார்.

முன்னதாக கூடுதல் டிஜிபி பாலச்சந்திரன், டிஐஜி செந்தூர்பாண்டியன், எஸ்.பி.துரைசாமி ஆகியோர் கோழிக் கறியையும், குழம்பையும் ருசி பார்த்தனர். கோழிக் கறி திட்டத்துக்காக ஒரு கைதிக்கு 8 ரூபாய் 45 பைசா செலவாகிறது. சைவஉணவுக்காரர்களுக்கு 5 ரூபாய் 85 பைசா செலவாகும். அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 87லட்சத்து 90 ஆயிரம் செலவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+