பெரியாறு அணை: அதிமுகவுக்கு வாசன் அறிவுரை
சென்னை:முல்லைப் பெரியாறு அணை போன்ற உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளில் அதிமுகபோன்ற கட்சிகள் பொறுப்புணர்வுடன், பொறுமை காத்து நடந்திட வேண்டும் எனமத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், தமிழக அரசு கூட்டியஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இப்பிரச்சினையை படிப்படியாகத் தீர்க்க அனைத்துக்கட்சிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த ஒப்புதலை அதிமுகவும்தான்கொடுத்தது.
இப்போது இப்பிரச்சினையை அரசியலாக்க முனைவது சரியான செயல் அல்ல.அதிமுக போன்ற பொறுப்பான எதிர்க்கட்சிகள், இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வமானவிஷயத்தில் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் பெரியாறு அணை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திசை திருப்பும் வகையில்பேசியும், அறிக்கைகள் வெளியிட்டும் வருவது கண்டனத்துக்குரியது. இந்தபிரச்சினையில், இந்த நேரத்தில் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டியதுஒவ்வொருவரின் குறிப்பாக எதிர்க்கட்சியினரின் கடமையாகும்.
அமைச்சர்கள் மட்டத்தில் டெல்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சுமூகதீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.பெரியார் சிலையை தகர்த்ததும், அதைத் தொடர்ந்து இந்துக் கோவில்கள் மீது நடந்ததாக்குதல்களும் தவறானவை. வன்முறைக்கு இடம் கொடுக்காத வகையில் போலீஸார்முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடந்து கொண்டு, விஷமிகளை கைது செய்யவேண்டும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications