For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய்- ஜெ. கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில், மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்என்று மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என் ஆட்சிக் காலத்தில், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. ஆனால்மீனவர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் டீசலுக்கான விற்பனைவரியை தள்ளுபடி செய்தேன்.

மீனவர்களுக்காக விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் மானிய விலையில் ஒதுக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறித்தினேன். மேலும் மீனவர்களின்படகுகளுக்கு மாதம் ஒன்றிற்கு 100 லிட்டர் மண்ணெண்ணெய் சலுகை விலையில்லிட்டருக்கு ரு.27.60 காசுக்கு வழங்க உத்தரவிட்டேன்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சி பொறுப்பேற்றமைனாரிட்டி திமுக அரசு மீனவரிகளின் படகுகளுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடுதற்போது ரத்து செய்துள்ளது.

இதனால் மீனவர்கள் வெளிமார்க்கெட்டில் லிட்டர் ஒன்றிற்கு 40 ரூபாய் வீதம்மண்ணெண்ணெய் வாங்கி மீன் பிடி படகுகளை இயக்குவது மட்டுமல்ல, திருட்டுமண்ண்ெணெய் வாங்கிய குற்றச்சாட்டுக்கும் மற்றும் காவல் துறைநடவடிக்கைகளுக்கும் ஆளாகின்றனர்.

மீனவர்களின் வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மீனவர்களுக்காகவினியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் மானிய விலையில் ஒதுக்க வேண்டும்.மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயை உடனடியாக வழங்காவிட்டால்மீனவர்களுடன் இணைந்து அவர்களின் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கவேண்டியதிருக்கும் என்பதை எச்சரிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X