பிரதமருக்கு எதிராக பாஜக போராட்டம்
டெல்லி:முஸ்லீம் சமுதாயத்தினருக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக, இதைக் கண்டித்து டிசம்பர் 15ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு நாடுமுழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி,சிறுபான்மையினரின் ஓட்டுக்களை மட்டுமே குறி வைத்து, ஐக்கிய முற்போக்குக்கூட்டணி, இதுபோன்ற கொள்கைகளை கடைப்பிடிப்பது மிகவும்கண்டனத்துக்குரியது.
முதலில் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் கமிட்டியை அமைத்து முஸ்லீம்களைகவர்ந்தனர். இப்போது உ.பி. மற்றும் சில மாநில தேர்தலை மனதில் வைத்துமுஸ்லீம்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என கூறத் தொடங்கியுள்ளனர்என்றார்.
பாஜக நாடாளுமன்ற கட்சி செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில்,காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினர் என்றாலே முஸ்லீம்கள் மட்டும்தான். இதுநாடறிந்த பகிரங்க ரகசியம். டிசம்பர் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், உள்ளிட்ட போராட்டங்களை பாஜகநடத்தும்.
அனைத்து பெரு மற்றும் சிறு நகரங்களில் உள்ள மக்களிடையே, ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் அபாயகரமான கொள்கைகள் குறித்து விளக்கப்படும் என்றார்.
பின்னர் காங்கிரஸ் கூட்டணி அரசின் சிறுபான்மையினரை ஈர்க்கும் கொள்கைகளைக்கண்டித்து டிசம்பர் 15ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு நாடு முழுவதும்போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.