For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்கா கல்யாணத்திற்குத் தடை: தங்கை தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:தான் அழகாக இருந்ததால் அக்காவின் திருமணம் தடைபடுவதை எண்ணிவருத்தமுற்ற தங்கை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அரும்பாக்கத்ச்ை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பானுமதி.இவர்களுக்கு பிரேமா, மீனாட்சி என்ற மகள்களும், குமார் என்ற மகனும் உள்ளனர்.

பிரேமாவை விட மீனாட்சி சற்று அழகாக இருப்பார். இதனால் பிரேமாவைப் பெண்பார்க்க வருபவர்கள் எல்லாம் மீனாட்சியையே விரும்பினர். இதனால் பிரேமாவின்திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.

இதனால் பிரேமா மனம் உடைந்தார். அவரது வருத்தத்தைப் பார்த்து மீனாட்சியும்மனம் உடைந்தார். தன்னால்தானே அக்காவின் திருமணம் தடைப்படுகிறது என அவர்வருந்தினார். சில நாட்களாகவே இதுகுறித்து புலம்பியவாறு இருந்தார். அவரைவீட்டினர் சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது மீனாட்சிக்கு. தனதுஅக்காவின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று எண்ணிய மீனாட்சிதற்கொலை முடிவை எடுத்தூர். தனது துப்பட்டாவால் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.

வெளியில் போய் விட்டு வீடு திரும்பிய ராஜு, பானுமதி, பிரேமா ஆகியோர் மீனாட்சிதூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரைமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே மீனாட்சி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அக்காவின் நலனுக்காக தங்கை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டசம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X