திமுக ஆட்சியில் பங்கு கோரும் எஸ்ஆர்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை அமைக்க வேண்டும், திமுக ஆட்சியில் காங்கிரசுக்கும் பங்களிக்கவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், வாசனின் தீவிர ஆதரவாளருமான மூத்த காங்கிரஸ் தலைவருர்எஸ்ஆர்.பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவின் கண்ணப்பனிடம் தோற்றார் எஸ்ஆர்பி. அதிலிருந்து அமைதியாகவேஇருந்து வருகிறார். இந் நிலையில் திடீரென முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசிய அவர் பின்னர்நிருபர்களிடம் கூறுகையில்,

முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன். கொப்பறை தேங்காய் கொள்முதல் விலை மிகவும் குறைவாகஇருப்பதால் விவசாயிகள் கஷ்படுகிறார்கள். எனவே ஒரு கிலோ கொப்பறை தேங்காய்க்கு கொள்முதல் விலைரூ.40 கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கருணாநிதியிடம் கூறியுள்ளேன்.

இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமையும் பெற்று வாழவேண்டும். விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில்உச்சிபுளி வழியாக பொருட்கள் செல்கின்றன. இது தமிழக அரசுக்கு தெரியாமல் நடந்துள்ளது வியப்பாகஇருக்கிறது.

கருணாநிதி மத்திய அரசுக்கு எல்லா விஷயங்களிலும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார். எனவேபுலிகள் விஷயத்திலும் தமிழக அரசு விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். ஜெயலலிதா அரசியல் மாற்றம் வரும்என்று கூறி வருகிறார். ஆனால் அப்படி எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பே இல்லை.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தோழமை உணர்வுடன் இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவைஅமைக்க வேண்டும் என்ற கருத்தை மேலிடத்துக்கு தெரிவித்துவிட்டோம். இது குறித்து கருணாநிதியும், சோனியாகாந்தியும் தான் முடிவு எடுக்க வேண்டும்.

தமிழ்மொழியை ஆட்சி மொழியாக அமல்படுத்த கோரி டாக்டர் ராமதாஸ் போராட்டம் நடத்துவதைவரவேற்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+