பிஇ: நுழைவு தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கு
சென்னை:மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில் படிப்புக்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ததைஎதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுநடத்துவதை ரத்து செய்யலாம் என தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழு சமீபத்தில்அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யவகை செய்யும் சட்ட மசோதா கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில்நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் மணிகண்டன்என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,
கடந்த 4 ஆண்டுகளாக தொழில் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் குழப்பம்ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை சென்னைஉயர்நீதிமன்றதில் ரத்து செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு தற்போது நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்குகளை சமன்படுத்தும் முறை அமல்படுத்தப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வித் திட்டத்துக்கும். தமிழககல்வித்திட்டத்துக்கும் வேறுபாடுகள் உள்ளது.
மார்க்குகள் சமன்படுத்தும் முறையால் மத்திய கல்வித் திட்டத்தில் படித்தவர்கள் தான்பயனடைவார்கள். கிராமப் புற மாணவர்களுக்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் நோக்கம் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசுகொண்டு வந்துள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.