-ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வங்கிஊழியர்கள் அலறி அடித்து வெளியேறினர். வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.
பீச் சாலையில், ரிசர்வ் வங்கியின் அலுவலகம் உள்ளது. இன்று முற்பகல் 11.15மணிக்கு வங்கிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் பணம்வைக்கப்பட்டிருக்கும் அறையிலும் ஹால் பகுதியிலும் வெடிகுண்டுகள்வைக்கப்பட்டிருப்பதாக அந்த நபர் கூறவே வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அலறி அடித்து வெளியேறினர். போலீஸார்மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர்.
பணக் கட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.வங்கியின் பிற அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்தசோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
வெடிகுண்டு புரளியைக் கிளப்பிய நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர். இந்த குண்டு புரளியால் வங்கிப் பணிகள் பெருமளவில்பாதிக்கப்பட்டன.