For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு உதவி இல்லை: ஏ.கே.அந்தோணி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவிகள் எதையும் இந்தியா தரவில்லை என்றுமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

1971ம் ஆண்டு இதே நாளில், கிழக்கு வங்காளத்தில் பாகிஸ்தான் படையுடன் இந்தியாநடத்திய போரில், நமது நாடு அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் படைகள்இந்தியாவிடம் சரணடைந்தன. வங்கதேசம் பிறந்தது.

இந்த தினம் ஆண்டுதோறும் வெற்றி தினமாக (விஜய் திவஸ்) அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி டெல்லியில் உள்ள அமர்ஜவான் நினைவிடத்தில் அமைச்சர்ஏ.கே.அந்தோணி, முப்படைத் தளபதிகள் மலர் வளையம் வைத்து உயிர்த் தியாகம்செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அந்தோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் எல்லையில்தீவிரவாதிகள் ஊடுறுவல் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் கவனக்குறைவாகஇல்லாமல் தொடர்ந்து எச்சரிக்கையுடன் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இலங்கை அரசுடன் ராணு ரீதியிலான ஒத்துழைப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.இந்தியாவில் இலங்கை வீரர்களுக்கு ராணுவ ரீதியிலான பயிற்சியோ, ஆயுதப்பயிற்சியோ அளிக்கப்படவில்லை. நிர்வாக பயிற்சிதான் அவர்களுக்குத் தரப்பட்டது.

இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவிகள் அளிக்கப்பட மாட்டாது. அதில் மத்தியஅரசு தெளிவாகவே உள்ளது என்றார் அந்தோணி.

சமீபத்தில் சண்டிகரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் இலங்கை விமானப்படையினருக்கு போர் விமானங்கள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சிகொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. உக்ரைன் நாட்டிடமிருந்து மிக் ரகபோர் விமானங்களை இலங்கை வாங்கவுள்ளது. அந்த விமானங்களைஇயக்குவதற்கான பயிற்சியே இது என்றும் கொழும்பு பத்திரிகைகளில் செய்திகள்வெளியாகின.

ஆனால் இந்தியாவில் இலங்கை படையினருக்கு எந்தவித ராணுவப் பயிற்சியும்அளிக்கப்படவில்லை, நிர்வாகப் பயிற்சியே அளிக்கப்பட்டது என்று பாதுகாப்புஅமைச்சர் அந்தோணி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X