நகை வியாபாரிகளை கடத்தி பயங்கர கொள்ளை

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:பெரம்பலூர் அருகே சடைக்கம்பட்டி என்ற இடத்தில் 4 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் இரண்டு நகைக்கடை உரிமையாளர்களை மறித்து, கடத்திச் சென்றுஅவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பணத்தைகொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் அசோக் குமார், சுபாஷ் சந்த். இருவரும் அண்ணன்,தம்பிகள். பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்குநகைகளை கொண்டு வந்து விற்பது வழக்கம்.

பெரம்பலூர் அருகே உள்ள சில நகைக் கடைகளுக்கு வந்து நகைகளை விற்று விட்டுகாரில் பெரம்பலூர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சடைக்கம்பட்டி அருகேநான்கு பேர் கொண்ட கும்பல் இவர்களது காரை வழிமறித்து நிறுத்தியது.

பின்னர் இருவரையும் தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பல லட்சம் பணம்,நகைகளை கொள்ளையடித்து விட்டு அந்தக் கும்பல் தப்பி விட்டது. இருவரும்போலிஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து மாவட்ட எஸ்.பி. பிரேம் ஆனந்த்சின்ஹா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க மாநிலம் முழுவதும் உள்ள போலீஸார்உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளைக் கும்பலைபோலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+