பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 45 லட்சம் உதவி
சென்னை:ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 45லட்சம் பரிசாக அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தோஹாவில் நடைபெற்ற 15வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய அணியில் இடம்பெற்றதமிழகத்தைச் சேர்ந்த வீரர்களில், செஸ் போட்டியில் சிறந்து விளங்கும் சசிகிரண், தங்கம் வென்றதைப் பாராட்டிதமிழக அரசின் சார்பில் ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும்.
தடகள விளையாட்டுப் போட்டியில் சிறப்பான பல சாதனைகள் படைத்தவரும், தமிழகத்தின் சார்பில் 1997ம்ஆண்டு முதல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகள் குவித்தவருமான அஞ்சு பாபிஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதைப் பாராட்டி ரூ. 15 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
ஆண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சதீஷ் கெளசலுக்கு ரூ. 10 லட்சம் பரிசாகவழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தடகளப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை சாந்தி செளந்தரராஜன் உள்ளிட்ட பரிசு பெற்றஅனைவருக்கும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி பரிசுவழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications