பெரியாறு அணை: நாளை வைகோ நடைபயணம்
மதுரைமுல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி மதிமுகபொதுச் செயலாளர் வைகோ நாளை மதுரையிலிருந்து தேனி மாவட்டம் கூடலூர்வரையிலான நடைபயணத்தைத் தொடங்குகிறார்.
முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து, இந்தப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தின் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையிலும், மதுரையிலிருந்து கூடலூர் வரை நடைபயணம் மேற்கொள்ள வைகோமுடிவு செய்துள்ளார்.
இதன்படி முல்லைப் பெரியாறு உரிமை காப்பு நடைப்பயணம் என்ற பெயரில்வைகோ தலைமையில் மதிமுகவினர் நாளை காலை 10 மணிக்கு மதுரையிலிருந்துநடைபயணத்தைத் தொடங்குகின்றனர்.
வண்டியூர் தெப்பக்குளத்திலிருந்து தொடங்கும் இந்த நடைபயணம், உசிலம்பட்டி,ஆண்டிப்பட்டி, தேனி, சின்னமனூர் வழியாக வருகிற 23ம் தேதி இரவு கூடலூரைஅடைகிறது.
6 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணத்தில் பெரியாறு பாசனப் பகுதியான மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தமதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். விவசாயிகளும் இதில்பங்கேற்கின்றனர்.
இந்த நடைபயணத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்துதெரிவித்து வைகோவுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications