பிஏவுடன் காதல்-அதிமுக எம்எல்ஏ மகள் கடத்தல்?
சேலம்:சேலத்தில் அதிமுக எம்எல்ஏ மகளை அவரது உதவியாளரே கடத்திச் சென்றதாக போலீசில் புகார்தரப்பட்டுள்ளது.
சேலம் 1வது தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிச்சந்திரனின் மகள் கலைவாணி. பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்துவரும் இவர்சில வாரங்களுக்கு முன் காணமால் போனார்.
அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் தனது மகளை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினார். ஆனால்கலைவாணியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந் நிலையில் கலைவாணி காணமால் போன நாள் முதல்ரவிச்சந்திரனின் உதவியாளர் சிவக்குமாரும் (25) மாயமானார்.
இதனால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன், சிவக்குமார் தனது மகளை கடத்தி சென்று இருக்க கூடும் என கருதிஅம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில்,
மைனர் பெண்ணான தனது மகள் கலைவாணியை சிவக்குமார் என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்திசென்று விட்டார். இதற்கு அவரது தந்தை பழனிசாமி, தாய் வனஜா, தங்கை வசந்தி ஆகியோரும் உடந்தையாகஇருந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எனது மகளை மீட்டுத் தர வேண்டும்என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எம்எல்ஏ மகளைகண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைவாணியும் சிவக்குமாரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போய்விட்டஇவர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications