யோபுவின் 3 மனைவிகள் இப்போதைக்கு விடுவிப்பு
சென்னை:இரண்டு நாள் போலீஸ் விசாரணைக்கு பின் யோபு சரவணனின் 3 மனைவிகளும் விடுவிக்கப்பட்டனர்.
போலி பிஷப் யோபு சரவணன் மனைவிகள் முதல் மனைவி மெர்சி, இரண்டாவது மனைவி சாந்தி, மூன்றாவதுமனைவி அமுதா ஆகியோரிடம் யோபு அமுக்கிய நகைகள், பணம், சொத்துக்கள் இருக்கலாம் என்றுசந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக அவர்களிடம்விசாரணை நடத்தினர்.
![]() |
இதில் யோபுவின் முதல் மனைவி சாந்தி தன்னிடம் இருந்த சொகுசு காரை போலீசிடம் ஒப்படைத்தார்.மற்றவர்கள் தங்களிடம் ஏதுமில்லை என்று கூறிவிட்டனர். இதையடுத்து 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
விசாரணை நடைபெற்ற அறைக்கு பக்கத்து அறையில் யோபு சரவணனும், அவரது கூட்டாளி ராஜேந்திரனும்இருந்தனர். விசாரணை முடிந்தும் 3 பேரும் யோபு சரவணனை சந்தித்து பேசினார். இதில் அமுதாவிடம் மட்டும்யோபு நீண்ட நேரம் தனியாக பேசினார். பின்னர் அமுதா, சாந்தி, மெர்சி மூன்று பேரும் ஜெபம் செய்தனர்.
அருகில் இருந்த காவலர் ஒருவர் பைபிளில் ஒரு திருமணத்துக்கு மேல் செய்ய கூடாது என்று இருக்கிறது. நீங்கள்மூன்று திருமணம் செய்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு யோபு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தார்.













Click it and Unblock the Notifications