புது புது பிரச்சனை கிளப்பும் கேரளம்-துரைமுருகன்
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக புதுப் புதுப் பிரச்சினைகளைகேரள அரசு கிளப்புகிறது. தனது நிலையில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்துவருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்தியநீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில், தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும், கேரள நீர்ப்பாசனத்துறைஅமைச்சர் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் எந்த உடன்பாடும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையில்கலந்து கொண்டு விட்டு துரைமுருகன் இன்று சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுமார் 90 நிமிடங்கள்பேச்சுவார்த்தை நடந்தது. சுமூகமாகவே இருந்தது. சட்டம் மற்றும் தொழில்நுட்பவிஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை விவரங்களை முதல்வர் கருணாநிதியிடம் எடுத்துரைப்பேன். அதன்பின்னர் மீண்டும் கேரளாவுடன் பேச்சு நடத்துவதா அல்லது உச்சநீதிமன்றத்தைஅணுகுவதா என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததாற்கு, கேரள அரசு தனது நிலையில்பிடிவாதமாக இருப்பதும், புதுப் புதுப் பிரச்சினைகளை கிளப்பியதுமே முக்கியகாரணம் ஆகும். புதிய அணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுபிரச்சினைகளை கேரள அரசு கிளப்புகிறது.
ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு அணையின் உயரத்தை அதிகரிக்கவேண்டும் என்பதே தமிழக அரசின் திட்டவட்டமான ஒரே கோரிக்கை. அதில் நாங்கள்உறுதியாக இருந்தோம்.
மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முயற்சிக்கலாம் எனஅமைச்சர் சைபுதீன் ஜோஸ் கூறியுள்ளார் என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications