சிவகாசி பராக் பராக்: வெளியே வருகிறார் ஜெயலட்சுமி
திருச்சி:சிவகாசி ஜெயலட்சுமி மீதான அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் இன்னும் ஓரிருநாட்களில் அவர் சிறையிலிருந்து விடுதலை ஆகி வெளியே வருகிறார்.
ஏட்டு முதல் எஸ்.பி. வரை நெருங்கிய தொடர்பு வைத்து அத்தனை பேரையும் வளைத்துப் போட்டது உள்ளிட்டபல்வேறு வழக்குகளில் சிக்கி சிவகாசி ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் டிஎஸ்பி ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிவகாசிஜெயலட்சுமிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே ஜாமீன்கிடைத்து விட்டது.
அடுத்து தற்போது நகை மோசடி வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில்நகைக் கடை நடத்திய திருமூர்த்தி என்பவரை ஜெயலட்சுமியும், இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலுவும் அணுகி ரூ.45,000 ரூபாய்க்கு நகை வாங்கினர். அப்போது பெண் போலீஸ் எஸ்.ஐ போல உடை அணிந்து வந்தாராம்ஜெயலட்சுமி.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிவகாசி ஜெயலட்சுமிதிருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தெய்வராஜ், ரூ. 2000 தனி நபர் மற்றும் ரூ. 25 ஆயிரம்பிணைப்பத்திரத்தை தாக்கல் செய்து ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டார்.
இந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து ஜெயலட்சுமி விரைவில் விடுதலை ஆகி வெளியேவருகிறார்.