பெண்களாலும் ஜனாதிபதி ஆக முடியும்: கலாம்
கோவைபெற்றோர்கள் லஞ்சம் வாங்குவதாக தெரிந்தால் அவர்களை பிள்ளைகள் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
தமிழகம் வந்துள்ள அப்துல் கலாம் கோவை கொடீஷியா அரங்கில் நடைபெற்ற மாணவர்களுடனானகலந்துரையாடலில் கலந்து கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு அப்துல்கலாமிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.
லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கலாம் பதிலளிக்கையில், நமது நாட்டை எப்படிலஞ்ச லாவண்யம் இல்லாத நாடாக மாற்றுவது என்று கேட்கிறீர்கள்.
லஞ்ச லாவண்யமற்றதாக நமது நாட்டை மாற்றுவது சாத்தியமானதுதான். அந்த முயற்சி முதலில் நமதுவீடுகளிலிருந்து தொடங்க வேண்டும். நமது தந்தையோ, தாயோ லஞ்சம் வாங்குவதாக தெரிந்தால், அவர்களின்பிள்ளைகள் நேரடியாக அவர்களிடம் சென்று நீங்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
இப்படி ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் செயல்பட ஆரம்பித்தால் இந்த நாட்டை லஞ்ச லாவண்யமற்ற நாடாகநமது நாட்டை மாற்றுவது சாத்தியமானதுதான்.
ஆரோக்கியமான அரசியலை ஏற்படுத்த மாணவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. மாணவர்களும்,படித்தவர்களும் அரசியலுக்கு வருவதன் மூலம் அரசியலை ஆரோக்கியமானதாக மாற்ற இயலும்.
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க தற்போது விவாதங்கள் நடந்து வருகின்றன. அப்படி இட ஒதுக்கீடுகிடைத்தால் இந்திய குடியரசுத் தலைவராக ஒரு பெண்ணால் வர முடியும் என்றார் கலாம்.
பின்னர் அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழககத்தில் நடந்த மாணவர்கள் கலந்துரையாடல்நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த கலந்துரையாடலில் 6000 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications