மலேசியாவில் இடிக்கப்படும் இந்துக் கோவில்கள்
கோலாலம்பூர்:மலேசியாவில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்துக் கோவில்களை இடித்துத் தள்ள அந்நாட்டு அரசுஉத்தரவிட்டுள்ளதால், அந் நாட்டு இந்துக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மலேசியா முஸ்லீம் நாடாக இருந்தபோதிலும், இங்கு இந்தியாவைச் சேர்ந்த இந்துக்களும் கணிசமாக உள்ளனர்.மலேசியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் ஆகும். இதில் பெரும்பாலானவர்கள் தமிழர்களே.
இதனால் மலேசியாவில் ஏராளமான இந்துக் கோவில்களும் உள்ளன. பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்ட இந்தக்கோவில்களில் பல சாலை ஓரங்களிலும், பூங்காக்களிலும் அமைந்துள்ளன.
தற்போது கோலாலம்பூரில் சாலைகளை மேம்படுத்தும் பணியில் அரசு இறங்கியுள்ளது. இதற்காக விதிமுறைகளைமீறி, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கோவில்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 70 இந்துக்கோவில்களை இடிக்கப் போகிறார்களாம்.
மலேசிய அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு இந்துக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கோவில்களை இடிப்பதை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர். கோலாலம்பூர் நீதிமன்றத்தில் வழக்குகளும்தொடரப்பட்டுள்ளன.
இந்துக் கோவில்கள் இடிப்பிலிருந்து தப்புமா என்பது இந்த வழக்குகளின் தீர்ப்பைப் பொறுத்தே உள்ளது.