பனி-லண்டன், டெல்லி விமான நிலையங்கள் திணறல்
லண்டன் - டெல்லி:கடும் பனி மூட்டம் காரணமாக டெல்லியிலும் பிரிட்டனிலும் விமான சேவை மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.
![]() |
உலகின் மிக பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள்பனி மூட்டத்தால் முடங்கிவிட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடந்த இரு தினங்களாக விமானநிலையத்திலேயே கடும் குளிரில் நேரத்தை கடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அட்லாண்டிக் கடலின் இரு பகுதிகளிலும் மிகக் கடுமையான பனிப் பொழிவும் பனி மூட்டமும் நிலவுகிறது.விசிபிலிடி ஜீரோ என்ற நிலையில் இருப்பதால் விமானங்களை இயக்க முடியவில்லை.
கிருஸ்துமஸ் விடுமுறையில் வெளிநாடுகள், வெளியூர் செல்ல திட்டமிட்டவர்கள் இதனால் கடும் பாதிப்புக்குஉள்ளாகியுள்ளனர். ஹீத்ரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்துள்ளதால் விமான நிலையமேசந்தை போல மாறிவிட்டது.
![]() |
அங்கு குளிரில் நடுங்கும் பயணிகளுக்கு இலவசமாக போர்வைகள், உணவு, தேனீர் வழங்கப்பட்டு வருகிறது.
டெல்லியிலும் இதே நிலை தான் உள்ளது. கடந்த பல நாட்களாகவே விமான சேவை பனி மூட்டத்தால்பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து இன்று காலை கிளம்ப வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ், ஏர் சஹாராவிமானங்கள் பிற்பகலில் தான் சென்னைக்குக் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல டெல்லியில் இருந்து நாட்டின் பிற நகர்களுக்கு புறப்பட இருந்த விமானங்களும் தாமதமாகியுள்ளன.














Click it and Unblock the Notifications