ம.ஜ.தளத்திலிருந்து தேவே கெளடா டிஸ்மிஸ்
திருவனந்தபுரம்:மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர்தேவே கெளடா நீக்கப்பட்டார்.
தேவே கெளடா தலைமையில் செயல்பட்டு வரும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி,சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்துஆட்சியைப் பிடித்தது.
இந்தக் கூட்டணி ஆட்சியின் முதல்வராக தேவே கெளடாவின் மகன் குமாரசாமிபொறுப்பேற்றார். மதச்சார்பற்ற என்ற பெயரை வைத்துக் கொண்டு பாஜகவுடன்கெளடா கூட்டணி வைத்தது அவரது கட்சியின் சில தலைவர்களுக்குப்பிடிக்கவில்லை.
இதனால் கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது. முன்னாள் மத்திய அமைச்சரானவீரேந்திரகுமார் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துப் பேசி வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீரேந்திக குமார் தலைமையிலான கேரளமாநில மதச் சார்பற்ற ஜனதாதளத்தை கலைத்து விட்டதாக கெளடா அதிரடியாகஅறிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வீரேந்திர குமார் கோஷ்டியினர் நேற்றுதிருவனந்தபுரத்தில் கட்சியின் தேசிய செயற்குழுவைக் கூட்டினர். இதில் 28 பேர்கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேவே கெளடாவை கட்சியை விட்டு நீக்கி முடிவெடுக்கப்பட்டது.மேலும், கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதாதளத்தையும் கலைத்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் புதிய தலைவராக சுரேந்திர மோகன் தேர்வு செய்யப்பட்டார். ஒழுங்குநடவடிக்கைக் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தலைவராக புதுச்சேரியைச்சேர்ந்த கணேஷ் அறிவிக்கப்பட்டார்.
இன்று நடைபெறும் தேசிய கவுன்சில் கூட்டத்தில், கெளடா நீக்கத்துக்கு ஒப்புதல்பெறப்படவுள்ளதாக வீரேந்திர குமார் தெரிவித்தார்.