ஜோர்டான் கப்பலை புலிகள் கடத்தினர்-இலங்கை
கொழும்பு:இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற ஜோர்டான் நாட்டுக் கப்பல் என்ஜின் செயல்பாட்டை இழந்துஇலங்கையின் முல்லைத் தீவுக்கு அருகே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிக்குள்நுழைந்தது.
இதையடுத்து அந்தக் கப்பலில் புலிகளின் கடற்படையினர் ஏறி சோதனை நடத்தினர்.
ஆனால், இந்தக் கப்பலை புலிகள் கடத்திவிட்டதாக இலங்கை பாதுகாப்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பர்ஹா-3 என்ற கப்பல் 23 ஊழியர்கள் மற்றும்14,000 டன் அரிசியுடன் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து தென் ஆப்பி>க்காவின் டர்பன் நகருக்குச் சென்றுகொண்டிருந்தது.
இலங்கையின் முல்லைத் தீவு அருகே புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதியில் சென்றபோது அதன்என்ஜின்கள் பழுதாயின. இதனால் கப்பல் முல்லைத் தீவு நோக்கி நகர்ந்தது. இதையடுத்து அந்தக் கப்பலில்விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏறி அதை கைப்பற்றிக் கொண்டனர்.
கப்பலை கடல் புலிகள் கைப்பற்றியது குறித்து இங்கிலாந்தின் பால்மவுத் நகரில உள்ள கடல் மீட்புஒருங்கிணைப்பு மையத்திற்கு கப்பல் ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த மையத்திலிருந்துஇலங்கை கடற்படைக்கும் தகவல் வந்தது.
கப்பலில் இருந்தவர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள். கப்பலுடன் தொடர்பு கொள்ளஇலங்கை கடற்படை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. தகவல் தொடர்பை புலிகள்துண்டித்து விட்டதாக தெரிகிறது என்றனர்.
முல்லைத் தீவிலிருந்து 3 கடல் மைல் தொலைவில் கப்பல் இருப்பதாக தெரிகிறது. அங்குதான் புலிகளின் கடல்புலிகள் பிரிவின் கடற்படைத் தளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையன் கூறுகையில், ஈழம் கடற் பகுதிக்குள்கப்பல் நுழைந்ததைக் கண்டு எங்கள் கடற்புலிகள் அந்தக் கப்பலில் ஏறி சோதனையிட்டனர். அப்போது அந்தக்கப்பல் என்ஜின் செயல்பாட்டை இழந்தது தெரியவந்தது. அது எதிரிக் கப்பல் இல்லை என்பதுஉறுதியானதையடுத்து கப்பலில் இருப்பவர்களுக்கு எங்கள் படையினர் உதவிகளை செய்து வருகின்றனர்என்றார்.












Click it and Unblock the Notifications