கேபிள் எரிந்தது-தமிழகம் முழுவதும் ரயில்வே டிக்கெட் ரிசர்வேசன் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தென்னக ரயில்வேயின் முன்பதிவு கம்ப்யூட்டர்களுக்கான நெட்வொர்க் கேபிள் எரிந்து போனது. இதனால்தமிழகம் முழுவதும் ரயில்வே முன்பதிவு செய்வது அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

கிருஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. ரயில்களில் முன் பதிவு செய்ய ஆயிரக்கணக்கானோர் முட்டி மோதி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை எம்எம்சி கட்டடத்தில் உள்ள ரயில்வே ரிசர்வேசன்சிஸ்டத்தின் முக்கிய நெட்வோர்க் கேபிள் எரிந்து போனது. இதனால் தமிழகம் முழுவதும் நெட்வோர்க்பாதிக்கப்பட்டு ரிசர்வேசன் பணிகள் முழுவதுமாக முடங்கிப் போயின.

வயர்களை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் பல மணி நேரமாக பொது மக்கள் ரிசர்வேசன்கவுண்டர்கள் முன் காத்துக் கிடக்கின்றனர். முன் பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளுக்கான டிக்கெட்டுகளைகையால் எழுதித் தந்து வருகின்றனர் ரயில்வே ரிசர்வேசன் கவுண்டர் ஊழியர்கள்.

கேபிள் எரிந்து போனதையடுத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரிசர்வேசன் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+