போலி பிஷப் ஆனந்தராஜிடம் மீண்டும் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:வீடு கட்டும் திட்ட மோசடியில் போலி பிஷப் யோபு சரவணனின் குருவான ஏற்கனவே கைதாகி சிறையில்அடைக்கப்பட்டுள்ள போலி பிஷப் ஆனந்தராஜிடம் சிபிசிஐடிபோலீஸார் மீண்டும் தீவிர விசாரணைநடத்தியுள்ளனர்.

வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை மோசடிசெய்ததாக முதலில் போலி பிஷப் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து யோபு சரவணன்கைது செய்யப்பட்டார்.

யோபு சரவணன் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ஆனந்தராஜ் செய்த மோசடியைப் பார்த்துத்தான்தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். எனவே, ஆனந்தராஜுக்கும், யோபுவுக்கும் இடையேநெருங்கிய தாடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

இதையடுத்து ஆனந்தராஜை போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து ஆனந்தராஜை போலீஸ் காவலில் விடுவிக்கக் கோரி திருக்கழுக்குன்றம் நீதித்துறை மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் போலீஸார் மனு செய்தனர்.

இதை ஏற்ற நீதிபதி தங்கமாரியப்பன் ஜனவரி 3ம் தேதி வரை ஆனந்தராஜை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து ஆனந்தராஜை போலீஸார் தங்களது காவலில் எடுத்து காஞ்சிபுரத்திற்குக்கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து அவரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி சுப்பையா தலைமையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விசாரணையின்போது யோபுவுக்கும், ஆனந்தராஜுக்கும் இடையே தொடர்பு உள்ளதாஎன்பது குறித்து முக்கியமாக விசாரிக்கப்பட்டது.

மேலும், ஆனந்தராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, 500 பேரிடம் வசூலிக்கப்பட்ட ரூ. 20 கோடிபணத்தை தான் மோசடி செய்ததாக ஆனந்தராஜ் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

விசாரணையின் ஒரு கட்டமாக ஆனந்தராஜ் மோசடி செய்ததாக கூறப்படும் கர்நாடகம், ஆந்திரா, திருச்சி,புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு அவரை கூட்டிச் சென்று விசாரிக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+