பழனி அருகே கார் கவிழ்ந்து 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பழனி:பழனி அருகே இன்று அதிகாலை கார் ஒன்று கவிழந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பெருந்தல்மன்னன் என்ற இடத்தை சேர்ந்த 30 பேர் தமிழ்நாட்டிற்கு 3கார்கள் மூலம் சுற்றுலா வந்தனர். தமிழ்நாட்டில் உள்ள புனித தளங்களுக்கு சென்று விட்டு இன்று பழனி வழியாககேரளா திருப்பினர்.
வயலூர் என்ற இடத்தில் சென்றபோது ஒரு காரின் டயர் பஞ்சராகி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் ஷாஜிதா(33), சுபைதா (50) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் பழனியில் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி முகமது, உமர் பாருக் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications