ரத்தினவேல் தேவர் சிலை: கருணாநிதி திறக்கிறார்
சென்னை:மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி ரத்தினவேல் தேவரின் சிலையை திருச்சியில் ஜனவரி 28ம் தேதி முதல்வர்கருணாநிதி திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து சிலை அமைப்புக் குழுத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி விடுத்துள்ள அறிக்கை:
திருச்சி நகராட்சித் தலைவராக 13 ஆண்டுகள் சிறப்புற பணியாற்றியவர் ரத்தினவேல் தேவர்.
திருச்சி அருகே லாம்பரசம்பேட்டை என்ற இடத்தில் திருச்சி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதி மக்களின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனது சொந்த செலவில் பிரமாண்டமான தண்ணீர்த் தொட்டியை கட்டியவர்.
இதற்காக இங்கிலாந்து அரசு அவரைப் பாராட்டிக் கெளரவித்தது. மேலும் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேருஆகியோரின் பாராட்டையும் அவர் பெற்றார்.
ராஜாஜி தலைமையில் தமிழகத்தில் அமைச்சரவை பதவியேற்றபோது அவரது அமைச்சரவையில் இடம் பெறதேவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த தேவர், மதுரையைச் சேர்ந்தடி.எஸ்.எஸ்.ராஜனை அமைச்சராக்குமாறு பரிந்துரைத்த பெருந்தன்மையான மனதுக்குரியவர்.
கடந்த ஆட்சியில் தேவருக்கு சிலை எழுப்புவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு கடந்தஆட்சியில் அனுமதி கிடைக்கவில்லை.
முதல்வராக கருணாநிதி பதவியேற்றவுடன் அவரை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைஏற்ற முதல்வர் கருணாநிதி, தேவருக்கு திருச்சியில் சிலை வைக்க அனுமதி கொடுத்தார்.
கடந்த 22ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்து சிலை வைக்க அனுமதி கொடுத்ததற்காக நன்றிதெரிவித்தோம். மேலும் சிலையை கருணாநிதியே திறக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தோம்.
முதல்வர் கருணாநிதியும் எங்களது அழைப்பை ஏற்றுக் கொணட் வருகிற ஜனவரி 28ம் தேதி சிலையைத் திறந்துவைக்க ஒப்புதல் அளித்தார்.
சிலை வைக்க அனுமதி கொடுத்தற்காகவும், சிலையைத் திறந்து வைக்க ஒப்புதல் கொடுத்ததற்காகவும் சிலைஅமைப்புக் குழு, திருச்சி மாநகர மக்கள் சார்பில் முதல்வருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுகூறியுள்ளார் கோபால்ஜி.












Click it and Unblock the Notifications