வைகோ மீது திமுக அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:மதிமுக உள்கட்சி மோதல் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை தொடர்புப்படுத்திகளங்கம் கற்பித்துப் பேசிய வைகோ மீது வழக்கு தொடரப்படும் என திமுகபொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதிமுகவின்மேல்மட்டத் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலில் திமுக தலைவரும்,முதல்வருமான கருணாநிதியை சம்பந்தப்படுத்தி வைகோ பேசியுள்ளார்.
மதிமுக குழப்பத்திற்கு கருணாநிதிதான் காரணம் என வைகோ கூறியிருப்பதுகண்டனத்துக்கு>யது.
முதல்வர் மீது களங்கம் கற்பிக்கும் செயல் இது. எனவே வைகோ மீதும், அவரதுபேட்டியை வெளியிட்ட நாளிதழ் மீதும் வழக்கு தொடரப்படும் என்றார் ஆற்காடுவீராசாமி.












Click it and Unblock the Notifications