மகாதேவன் தலைமையில் ஜெ. பேரவை கூட்டம்
சென்னை:தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பேரவை மாவட்ட ஆலோசனை கூட்டம் ஜனவரி 3ம் தேதி தொடங்கும் எனஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஜெயலலிதா பேரவையில் செயல்பாடுகளைஊக்குவித்திடும் வகையிலும், பேரவையின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஜெயலலிதா பேரவையின் மாவட்டஆலோசனைக் கூட்டங்கள் வரும் 3ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை, கழக அமைப்புரீதியான அனைத்துமாவட்டங்களிலும் நடைபெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள் ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மகாதேவன் (சசியின் அக்காள் மகன்)தலைமையில் நடைபெறவுள்ளன. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்குஉட்பட்ட மாவட்ட ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் அனைவரும்இக்கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு வளர்ச்சிப் பணிகள் குறித்து கருத்துரை வழங்கிட உரிய ஏற்பாடுசெய்திட வேண்டும்.
ஆலோசனை கூட்டஙகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனகூறியுள்ளார்.