தனுஷ்கோடி மருமகன் வீட்டில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான தனுஷ்கோடி ஆதித்தனின் மருமகன் வீட்டில் புகுந்தகொள்ளையர்கள் 65 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தனின் மருமகன் ராஜேஷ் கண்ணா. சென்னையில் வசித்து வருகிறார். இவர் நேற்றுஇரவு தனது குடும்பத்துடன் வீட்டுக்கு அருகில் உள்ள சர்ச்சுக்கு நள்ளிரவு ஜெபத்துக்காக சென்றிருந்தார்.
அந்த சமயம் அவரது வீட்டுப் பூட்டை உடைத்து சில மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த65 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பித்து விட்டனர்.
சர்ச்சுக்குப் போய் விட்டு வந்து பார்த்த ராஜேஷ் கண்ணா குடும்பத்தினர் திருட்டை அறிந்து அதிர்ந்து போலீஸில்புகார் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications