நெரிசல் பலி: 7 விதவைகளுக்கு அரசு வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:அதிமுக ஆட்சியில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மழை வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 7பேரின் மனைவியருக்கு அரசுப் பணியில் சேருவதற்கான ஆணைகளை அவர்களிடம் முதல்வர் கருணாநிதிவழங்கினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள பள்ளிக் கூடத்தில் மழை, வெள்ளநிவாரண உதவித் தொகை பெறுவதற்காக வந்திருந்தவர்கள் மத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 42பேர் பலியானார்கள்.

உயி>ழந்தவர்களில் 7 பேரின் மனைவிகளுக்கு தமிழக அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதிஅறிவித்திருந்தார். அதன்படி ஆர். அமுதாவுக்கு சத்துணவு அமைப்பாளர், எஸ்.அமுதா, ஷர்மிளா பானு,பரமேஸ்வரி, சாந்தி, மீனா, சித்திரைக்கனி ஆகியோருக்கு சத்துணவு சமையலர் வேலையும் வழங்கஉத்தரவிடப்பட்டது.

அவர்களுக்கான பணி ஆணைகளை முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் வைத்து வழங்கினார்.நிகழ்ச்சியில் அமைச்சர் பூங்கோதை, சமூக நலத்துறைச் செயலாளர் பழனியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த நெரிசலுக்கு திமுக கவுன்சிலர் தனசேகரன் பரப்பிய வதந்தியே காரணம் என்று அவரைத் தூக்கி குண்டர்சட்டத்தில் ஜெயலலிதா போட்டது நினைவுகூறத்தக்கது. இதற்காக நீதிமன்றத்தின் கண்டனத்தையும் ஜெயலலிதாபெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+