30 கோடிக்கு வைகோவையே வாங்கியிருப்பேன்
சென்னை:30 கோடி பணத்தை செலவழித்து மதிமுகவை உடைத்து விட்டதாக வைகோகூறுவதைக் கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. அந்த அளவுக்கு பணம் இருந்தால் நான்வைகோவையே விலைக்கு வாங்கியிருப்பேன் என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவுக்குத் தாவ மதிமுக பொதுச் செயலாளர்வைகோவுக்கு ரூ. 40 கோடி தரப்பட்டதாக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில்பேசப்பட்டது.
இந் நிலையில் இப்போது ரூ. 30 கோடி செலவிட்டு மதிமுகவை திமுக உடைக்கமுயல்வதாக பிரதமரிடம் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது,
மிக பலமாக சிரித்த கருணாநிதி, அந்தப் பணம் இருந்தால் நான் வைகோவையேவிலைக்கு வாங்கியிருப்பேனே.
அது மட்டுமா பிரதமரிடத்தில் அவர் சொன்னார். தயாநிதி மாறன்தான் மதிமுகவைஉடைத்தார் என்றும் கூறியுள்ளார். இப்படிச் சொன்னவர் கொஞ்சமாவது யோசனைசெய்து விட்டுக் பேசியிருக்க வேண்டும்.
தயாநிதி மாறன் குடும்பத்தோடு லண்டனக்குப் புறப்பட்டுப் போய் 10 நாட்கள்ஆகிவிட்டது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications