For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜன. 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன்தொடங்குகிறது.
ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டசபைக் கூட்டம் தொடங்குகிறது.புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பர்னாலா உரைநிகழ்த்துகிறார்.
அவரது உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர் ஆவுடையப்பன் வாசிப்பார்.அதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்படும். பின்னர் 22ம் தேதி ஆளுநர் உரைமீதான விவாதம் தொடங்கும்.
இந்தக் கூட்டத் தொடர் 1 வாரத்திற்கு நடைபெறும் எனத் தெரிகிறது.
Comments
Story first published: Saturday, December 23, 2006, 5:30 [IST]