கருணா கும்பல் தாக்குதல்-புலிகள் முறியடிப்பு!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகலா என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின்முகாம்கள் மீது கருணா பிரிவினர் இன்று கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 30விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக கருணா தரப்பு கூறியது.

ஆனால், இந்தத் தாக்குதலை முறியடித்து விட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டைநடந்து வரும் நிலையில் இன்று காலை மட்டக்களப்பு அருகே உள்ள தொப்பிகலாஎன்ற இடத்தில் உள்ள புலிகளின் 3 முகாம்கள் மீது கருணா கும்பல் திடீர் தாக்குதல்நடத்தியது.

வடமுனை, தரவி பிராந்தியத்தில் உள்ள குடும்பிமலை என்ற இடத்தில் உள்ள புலிகளின் முகாம்கள் மீது இந்தத்தாக்குதல் நடந்தது.

ராணுவ உதவியோடு 200க்கும் மேற்பட்ட கருணா பிரிவினர் இந்தத் தாக்குதலில்ஈடுபட்டனர். ஆனால், கருணா கும்பலின் தாக்குதலை சமாளித்து பதில் தாக்குதலில் விடுதலைப் புலிகள்இறங்கினர்.

இந்தத் தாக்குதலில் 30 விடுதலைப் புலி வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கருணாபிரிவைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்ததாகவும் கருணா பிரிவின் அரசியல் பிரிவானதமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆசாத்மெளலானா கூறினார்.

ஆனால், இதை புலிகள் மறுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் ராணுவ செய்தித் தாடர்பாளர் ராசய்யாஇளந்திரையன் கூறுகையில்,

இந்த மோதலில் கருணா கும்பலைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் படுகாயத்துடன் புலிகளால் சிறைபிடிக்கப்பட்டார். இந்த மோதலில் நான்கு விடுதலைப் புலிகள் காயமடைந்தனர். கருணா கும்பலுக்கு இலங்கைராணுவ வீரர்கள் உதவி செய்தது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+