673 பொது குழு உறுப்பினர்கள் ஆதரவு-எல்.ஜி
சேலம்:பொதுக் குழுவைக் கூட்டி முடித்து விட்டோம். தாயகத்தை கைப்பற்ற மாட்டோம். தனித் தாயகம் கட்டுவோம்.இனி மண்டலம் மண்டலமாக கூட்டம் நடத்தப் போகிறோம் என்று எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும்கூறியுள்ளனர்.
சேலத்தில் நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும்செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்தம் 673 பொதுக்குழு உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களிடம் முறையாக கையெழுத்து பெறப்பட்டுள்ளது. பொதுக்குழுஉறுப்பினர்கள் என்பவர்கள், பல அந்தஸ்துகளை உடையவர்களாக இருக்கிறார்கள். அவைத் தலைவர், மாவட்டசெயலாளர், பொருளாளர் ஆகியோரும் பொதுக்குழு அந்தஸ்தைப் பெற்றவர்கள்தான்.
இக்கூட்டத்தில் திமுகவினர் யாரும் வரவில்லை. அப்படிச் சொல்வது தவறு. தாயகத்தைக் கைப்பற்றும் எண்ணம்எங்களுக்கு இல்லை. அங்கே போகவும் மாட்டோம். நாங்களே தனியாக ஒரு தாயகத்தை நிர்மாணிப்போம்.
நாங்கள்தான் உண்மையான மதிமுக. அவர்களும் அப்படிக் கூறினால் அதைத் தடுக்க மாட்டோம். கூறி விட்டுப்போகட்டும். எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்.
அடுத்த கட்டமாக மண்டலம் மண்டலமாக மாநாடு போடப் போகிறோம். எங்களின் நிலைப்பாட்டை விளக்க இதுதேவைப்படுகிறது. தேவைப்பட்டால் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்றனர்.
இதற்கிடையே, மதிமுகவின் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்களில் மொத்தமே 6 பேர்தான் எல்.ஜி.கூட்டிய பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக வைகோ தரப்பினர் கூறுகின்றனர்.