For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுஎஸ் தூதரகங்கள்-வங்கிகளுக்கு தீவிர பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:சதாம் தூக்கிலிடப்பட்டதைடுத்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கதூதரகங்களுக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அமெரிக்க, இங்கிலாந்து தூதரகங்களுக்கு பாதுகாப்புபன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்தியஅதிரடிப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்க வங்கிகள், அலுவலங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது.

சதாம் ஆதரவாளர்களுக்கு ஈராக் பிரதமர் அழைப்பு:

இந் நிலையில் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் வன்முறையை விட்டு விட்டுஅரசியலுக்கு வர வேண்டும் என ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி அழைப்புவிடுத்துள்ளார்.

இன்று காலை சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட சில மணி நேரம் கழித்து மாலிக்கிஅறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சதாம் உசேனின் ஆதரவாளர்கள் தங்களதுவன்முறைப் பாதையிலிருந்து விடுபட்டு, அரசியலுக்கு திரும்ப வேண்டும்.

உங்களுக்கான கதவு இன்னும் திறந்தே உள்ளது. ஈராக்கில் உள்ள அனைவரும்ஒற்றுமையுடன் இணைந்து வாழ நீங்கள் முன்வர வேண்டும். அனைவரும் இணைந்துபுதிய ஈராக்கை நிர்மாணிப்போம் என்று கூறியுள்ளார் மாலிக்கி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X