ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீரங்கம்:திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிஇன்று காலை நடந்தது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டுபெருமாளை வணங்கினர்.

இந்தியாவில் உள்ள வைணவத் தலங்களில் முக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமிகோவில். மொத்தம் உள்ள எட்டுத் தலங்களில் ஸ்ரீரங்கமே தொன்மையானதும்,முதன்மையானதுமாகும்.

இங்கு வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.மொத்தம் 21 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

முதலில் கொண்டாடப்படுவது பகல் பத்து, அடுத்து வருவது இராப்பத்து. இடையில்ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு கோலாகலமாகநடைபெறும்.

அந்த வகையில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.சொர்க்க வாசல் வழியாக நம்பெருமாள் ஆடை, அணிகலன்களுடன்மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் அழைத்து வரப்பட்டார். அப்போது கூடியிருந்தலட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக கோவிந்தா கோவிந்தா என்றுபக்திக் கோஷங்களை எழுப்பியபடி சென்று பெருமாளை சேவித்தனர்.

ஏகாதசி விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை சேவித்தால்,ஆண்டு முழுவதும் பெருமாளை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி ஸ்ரீரங்கம் முழுவதம் பக்தர்கள் கூட்டம்நிரம்பி வழிகிறது. சமீபத்தில் பெரியார் சிலை சர்ச்சை எழுந்ததால் ஸ்ரீரங்கத்தில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும்மற்றும் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கும் பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீரங்கத்தைப் போலவே மதுரை கூடலழகர் பெருமாள் கோவில், சென்னைபார்த்தசாரதி திருக்கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்டபெருமாள் கோவில்களிலும் இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிம>சையாக நடந்தேறியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+