ரத்தம்... போர்.. போராட்டம்
பாக்தாத்:சதாம் ஹூசேன் சிறு வயதில் தனது தந்தையால் கொடுமைக்கு ஆளானவர். இதனால் வன்முறை அவரது மனதில்சிறு வயதிலேயே ஊடுருவி விட்டது.
இதனால் பிரச்சனைகளுக்கு வன்முறையே தீர்வு என்ற எண்ணத்தில் வளர்ந்தார். அவரது வாழ்வின் மிக முக்கியநிகழ்வுகள்:
1956: இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். பான் அராப் என்றஅமைப்பில் சேர்ந்து போராளியாக மாறினார். பின்னர் பாத் கட்சியில் இணைந்தார்.
1959: இராக் பிரதமர் அப்துல் கரீம் கஸீமை கொல்ல முயற்சித்தார். அந்த முயற்சி தோல்வி அடைந்ததால்ஈராக்கிலிருந்து தப்பி எகிப்துக்கு ஓடினார் சதாம்.
1963: ராணுவப் புரட்சி மூலம் ஈராக் அரசைக் கவிழ்த்தது பாத் கட்சி. சதாம் மீண்டும் பாக்தாத் திரும்பினார்.ஆனால் சில நாட்களிலேயே பாத் கட்சி ஆட்சி இழந்தது.
1968: பாத் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க சதாம் புரட்சி செய்து உதவினார். அதிபர் அப்துல் ரஹ்மான் அரீப்ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
1975: ஈராக் புரட்சிப் படை துணைத் தலைவராக இருந்த சதாம் உசேன், ஈராடன் மன்னருடன் எல்லைதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் ஈராக்கில் உள்ள குர்திஷ் புரட்சிக்கு கொடுத்து வந்தஆதரவை ஈரான் விலக்கிக் கொண்டது.
1979: அதிபர் அகமது ஹசன் அல் பக்கீர் பதவி விலகினார். புதிய அதிபராக சதாம் உசேன் பதவியேற்றார்.
1980, செப்டம்பர் 22: ஈரான் மீது சதாம் போர் தொடுத்தார்.
1988: குர்திஷ் மக்கள் அதிகம் வசிக்கும் நகரான ஹல்பஜாவில் ஈராக்கிய படைகள் ரசாயானத் தாகக்குதலைநடத்தின. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
1988, ஆகஸ்ட் 20: ஈரான், ஈராக் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
1990, ஆகஸ்ட் 2: குவைத்தில் ஊடுறுவியது ஈராக் படைகள். ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதித்தது.
1991, ஜனவரி 17: அமெரிக்கா தலைமையிலான படைகள் குவைத்தை விடுவிக்க ஈராக் மீது படையெடுத்தன.பிப்ரவரி 28ம் தேதி குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேறின.
1995: 99 சதவீத ஓட்டுக்கள் பெற்று மீண்டும் அதிபராக சதாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002, டிசம்பர் 7: குவைத்தில் ஊடுறுவியதற்காக சதாம் மன்னிப்பு கோ>னார். ஆனால் அதை குவைத் நிராகரித்துவிட்டது.
2004, பிப்ரவரி: பாக்தாதில் அபாயகர ஆயுதங்கள் இல்லை, அல் கொய்தாவுடன் தொடர்பு இல்லை என சதாம்அறிவித்தார்.
மார்ச் 20 - அமெரிக்கா போர் தொடுத்தது.
ஏப்ரல் 9 - பாக்தாத் நகரில் அமெ>க்க படைகள் ஊடுறுவின. சதாமின் 30 ஆண்டு கால ஆட்சி வீழ்ந்தது.
ஜூலை 22- சதாமின் இரு மகன்களான உதய், குவாசி ஆகியோர் மோசூல் நகரில் அமெரிக்கா நடத்தியதாக்குதலில் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 14 - சதாம் அமெரிக்க படைகளிடம் பிடிபட்டார்.
2005, அக்டோபர் 10 - சதாம் உசேன் மீதான விசாரணை தொடங்கியது.
2006 டிசம்பர் 30- சதாம் தூக்கில் போடப்பட்டார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications