வானில் பறந்து நூதன திருமணம்!
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு திருமண ஜோடி ஹாட் ஏர் பலூனில் பறந்து நூதன முறையில் திருமணம்செய்தது.
எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலை நாட்டவர்களைப் போல நம்மவர்களுக்கும்அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடி ஹாட் ஏர் பலூனில் பறந்து திருமணம்செய்து சாதனை படைத்துள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சுனில் வர்மா. இவருக்கும், ஆசிரியையான வந்தனாவுக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டது. இருவரும் வித்தியாசமாக திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரும்சம்மதித்தனர்.
இதைத் தொடர்ந்து பலூனில் பறந்து திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.எம்.எஸ்.மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மைதானத்தில் திருமண சடங்குகள் அனைத்தும் நடந்தன.
பின்னர் பலூனில் மணமக்கள், இருவரின் பெற்றோர் மற்றும் புரோகிதர் உள்ளிட்டோர் ஏறிக் கொண்டனர். பலூன் நடுவானில் பறந்தபோது இருவரும் மாலை மாற்றித் திருமணம் செய்துகொண்டனர். அப்போது தரையில் மங்கள வாத்தியம் முழங்கியது.
வந்தனாவின் நெற்றியில் சுனில் வர்மா சிந்தூர் (குங்குமம்) இட்டார். பின்னர் கீழிருந்தவர்கள் கைகளைத் தட்டிவாழ்த்தினர். பின்னர் பலூன் தரையிறங்கியது.
லிம்கா சாதனைப் புத்தகத்தில் இந்தத் திருமணம் இடம் பெறும் மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும்மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications