அன்டார்டிகா சிகரம் மீது ஏறி ஆஸி. குழு சாதனை
Subscribe to Oneindia Tamil
கான்பெரா:ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு பேர் அடங்கிய குழுவினர், அன்டார்டிகாவின்உயரமான சிகரமான வின்ஸன் மாஸிப்பின் உச்சியை அடைந்து புதிய சாதனைபடைத்துள்ளனர்.
![]() |
பனிக் கண்டமான அன்டார்டிகாவின் உயரமான சிகரம் வின்ஸன் மாசிப். இதன்உச்சியை ஆஸ்திரேலிய நாட்டுக் குழு ஒன்று அடைந்துள்ளது. இந்த சிகரத்தின் உயரம்4892 மீட்டர் ஆகும்.
![]() |
எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய அனுபவம் கொண்ட டங்கன் செஸ்ஸல் என்பவரதுதலைமையில் இந்தக் குழுவினர் நேற்று வின்ஸன் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.இதற்கு அவர்களுக்கு ஒரு மாதம் பிடித்தது.
![]() |
தங்களது பயணத்தின் நிறைவு குறித்து செஸ்ஸல் கூறுகையில், கிட்டத்தட்ட 300கிலோமீட்டர் தொலைவுக்கு நாங்கள் பனிக் கட்டிகளிடையே நடந்து வந்து மலைச்சிகரத்தை அடைந்துள்ளோம். மலை உச்சியின் மீது ஏறி நின்று நாங்கள் நடந்து வந்தபனிப் பாதையைப் பார்த்தது மிகப் பெரிய சாதனையாக இருந்தது.
![]() |
சிகரத்தின் உச்சியிலிருந்து 1100 கிலோமீட்டர் தொலைவிலான தென் துருவத்தைப்பார்த்தது மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. மிகவும் ரம்யமாக இருந்தது.
செஸ்ஸலுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மலையேற்றக் குழுவினரான பீட்டர் வீக்ஸ்,ராபர்ட் ஜேக்சன், ராபர்ட் நார்த் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
![]() |
இந்த சிகரத்தை அடைய 1200 மீட்டர் அளவுக்கு செங்குத்தாக ஏற வேண்டியிருந்தது.இந்த மலைப் பகுதியின் தட்பவெப்பம் -35 டிகிரி என்பது குறிப்பிடத்தக்கது.
அன்டார்டிகாவின் எல்ஸ்வொர்த் மலைப் பகுதியில் இந்த வின்ஸன் மாசிப் சிகரம்உள்ளது. தென் துருவத்திலிருந்து 1200 கிலோமீட்டர் தொலைவில் இந்த சிகரம்உள்ளது.

















Click it and Unblock the Notifications