பொங்கல் பானை விலை கிடுகிடு உயர்வு!
சென்னை:தமிழர் திருநாளாம் பொங்கல் நெருங்கி வந்து கொண்டுள்ள நிலையில் பொங்கல்பானை மற்றும் சர்க்கரையின் விலை கிடுகிடுவெ உயர்ந்துள்ளது.
தமிழர் திருநாள் என போற்றப்படும் பொங்கல் பண்டிகைகைக்கு இன்னும் 2வாரங்களே உள்ளன. இந்த நிலையில் பொங்கல் பானை உற்பத்தி படு வேகமாகஇருக்கிறது. பானை விற்பனையும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கிவிட்டது.
கடந்த ஆண்டை விட பொங்கல் பானையின் இந்த ஆண்டு விலை படு சூடாகஉள்ளது. தரமான பெரியா பானையாக இருந்தால் அதன் விலை ரூ. 100 வரைஇருக்கிறது. பூச்சு அலங்காரத்துடன் கூடிய பானையாக இருந்தால் ரூ. 150 வரைவிலை வைத்துள்ளனர்.
கரும்புகளும் விற்பனைக்கு வர ஆரம்பித்து விட்டன. தலைநகர் சென்னையில்,கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு கட்டுக்கள் வந்து இறங்க ஆரம்பித்துள்ளன.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
20 கரும்புகளைக் கொண்ட கரும்பு கட்டு அதிகபட்சம் ரூ. 130க்கு விற்கப்படுகிறது.கடந்த ஆண்டு இது 80 ரூபாயாக இருந்தது. இது கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்.இந்தக் கரும்பை சென்னைக்குள் கொண்டு வரும் செலவையும் சேர்த்தால் ரூ. 250 ஐஒரு கட்டு கரும்பு தாண்டும் எனத் தெரிகிறது.
அடுத்த முக்கியப் பொருளான வெல்லம் விலையும் அதிகமாகவே உள்ளதாக மக்கள்தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications