சங்கரராமன் வழக்கு: பிப். 2க்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி:சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதிசின்னப்பாண்டி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் சங்கராச்சாரியார்கள் உள்ளிட்ட 18 பேர்வரவில்லை. அவர்கள் சார்பில் வராததற்கு காரணம் தெரிவித்து தனித் தனியாகமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரவி என்கிற குருவி தொடர்ந்து வராமல்இருப்பதற்கு என்ன காரணம் என்று அவரது வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டார்.அதற்கு அவரது வழக்கறிஞர் மைத்துனி இறந்து விட்டதால் குருவி ரவியால் வரமுடியவில்லை என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்தொடரப்பட்டுள்ள சிறப்பு மனு இன்னும் விசாரணையில் இருப்பதால் வழக்குவிசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications