நண்பருடன் வழிப்பறியில் ஈடுபட்ட ஏட்டையா!
சென்னை:தனியார் நிறுவன அதிகாரியிடம் வழிப்பறி செய்த போலீசிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்படார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் மண்டல மேலாளராக பணிபுரிபவர் தாமஸ். இவர் தனது நண்பர் சுனில் என்பவருடன்கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி இரவு 7 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரையில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் தங்களை போலீசார் என கூறி காரில் ஏறிகாவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது வழியில் காரை நிறுத்தி அவர்களை மிரட்டி ரூ. 4,000 மற்றும் 2 பவுன் நகையை பறித்துக் கொண்டுதப்பி விட்டனர். இதுகுறித்து தாமஸ் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமைக் காவலராக பணி புரிந்த கலீல் தான் இந்தவழிப்பறியில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது.
கலீல் ஏற்கனவே இதேபோல் ஒரு வழிப்பறி வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டவர். கலீல் மற்றும் அவரதுநண்பர் செந்தில் இருவரையும் குற்றப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம்நகைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சைதாப்போட்டை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படனர்.












Click it and Unblock the Notifications