நீதிபதி மீது செருப்பை வீசிய கைதி
புதுச்சேரி:புதுச்சேரி அருகே முதலியார்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டகைதி, நீதிபதி மீது செருப்பை வீசினார்.
![]() |
முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ரமேஷ், ஜெயக்குமார். இருவரும் கடைகாரர்களிடம் ரவுடித்தனம்செய்தது தொடர்பாக கடந்த 2001ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும்தலைமறைவாகி விட்டனர்.
ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலீஸார் கைதுசெய்தனர். முதலியார்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த துவருகிறது.
நேற்று விசாரணைக்கு வழக்கு வந்தபோது அரசுத் தரப்பு சாட்சியான அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர்வெங்கடாசமி வரவில்லை. இதனால் நீதிபதி வைத்தியநாதன் வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதைக் கேட்டதும் ரமேஷும், ஜெயக்குமாரும் கோபமடைந்தனர். ரமேஷ் தான் போட்டிருந்த செருப்புகளைகழற்றி நீதிபதி மீது வீசினார். இதனால் அங்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
போலீஸார் உடனடியாக ரமேஷைப் பிடித்து வெளியே கொண்டு வந்தனர். நீதிபதி மீது கைதி செருப்பு வீசியதைக்கண்டித்து வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் போலீஸார் ரமேஷை சிறைக்குக் கொண்டு சென்றனர்.
போகும்போது தான் வைத்திருந்த ஒரு கடிதத்தை ரமேஷ் தூக்கி எறிந்து விட்டு போனார். அதில் சிறைஅதிகாரிகள் தன்னை மிரட்டுவதாகவும், நீண்ட நாட்களாக தன்னை சிறையில் வைத்திருப்பதாகவும்எழுதியிருந்தார்.













Click it and Unblock the Notifications