மாணவர்களுக்கு கேப்டன் கம்ப்யூட்டர் பயிற்சி!
விருத்தாசலம்:விருத்தாசலம் மாணவ, மாணவிகளுக்கு கம்யூட்டர் பயற்சி அளிக்க தேமுதிக தலைவரும், விருத்தாசலம்எம்எல்ஏவுமான விஜய்காந்த் ஏற்பாடு செய்துள்ளார்.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தனது சொந்த செலவில் கம்ப்யூட்டர் மையம் ஒன்றை தனது பிறந்த நாள்அன்று திறந்தார் விஜய்காந்த். இங்கு 30 கம்ப்யூட்டர்கள் மூலம் தினமும் 240 மாணவர்களுக்கு குறையாமல்கம்யூட்டர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
![]() |
இப்படி இவர்களுக்கு ஒரு மாத கால பயிற்சி நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் வேறு அணி மாணவர்களுக்குபயிற்சியளிக்கப்படும். இப்படி தொடர்ந்து அனைவரும் பயிற்சி பெற ஏற்பாடு செய்துள்ளார் விஜய்காந்த்.
மேலும் ஏழை நோயாளிகள், பிரசவத்துக்கு வரும் பெண்கள் ஆகியோருக்கு விருத்தாசலம் அரசுமருத்துவமனையில் வசதியாக சிகிச்சை பெற 50 படுக்கைகள் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் 120 பழையபடுக்கைகளை பழுது நீக்கியும் தந்துள்ளாராம்.
மேலும் தமிழக அரசு வழங்கும் எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ. 1 கோடியே 30லட்சத்தை விருத்தாசலம், கம்மாபுரம் ஆகிய 2 ஊராட்டி ஒன்றியங்கள் மற்றும், மங்கலம்பேட்டை, கெங்கைகொண்டான் ஆகிய 2 பேரூராட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளார் விஜய்காந்த். இந்த நிதி மூலம் பல்வேறு வளர்ச்சிபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.













Click it and Unblock the Notifications