நாகர்கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்
சென்னை:சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் நிறைந்து விட்டதால் இன்று இரவுமேலும் ஒரு சிறப்பு ரயில் நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது.
பொங்கலையொட்டி வழக்கமாக செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் தென் மாவட்டங்களுக்குச்செல்லும் பயணிகளின் நலனுக்காக 14 சிறப்பு ரயில்களை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்குவதாகரயில்வே அறிவித்தது.
இதற்கான முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் சில கூடுதல் ரயில்களை விட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை பரிசீலித்தரயில்வே சென்னையிலிருந்து இன்று இரவு நாகர்கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பு ரயிலை இயக்குகிறது.
இன்று இரவு 8 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து இந்த சிறப்பு ரயில் கிளம்புகிறது. காலை 10.45 மணிக்குநாகர்கோவிலை இது அடையும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலிலிருந்து நாளை சென்னைக்கு சிறப்பு ரயில்இயக்கப்படுகிறது. அங்கிருந்து மதியம் 1.30 மணிக்குக் கிளம்பி மறு நாள் காலை 4.30 மணிக்கு இந்த ரயில்எழும்பூரைவந்தடையும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.